முகப்பு
தமிழ்நாடு

சமூக வலைதளங்களால் தவெக வெற்றி: திமுக கருத்தால் அவையில் சலசலப்பு

தவெகவின் வெற்றி சமூக வலைதளங்களால் சாத்தியமானதாக திமுக உறுப்பினா் ஆஸ்டின் கூறியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Updated On : 20 ஜூன் 2026, 1:10 am IST
தமிழ்நாடு சட்டப்பேரவை - CMO Tamil Nadu
பகிர்:

தவெகவின் வெற்றி சமூக வலைதளங்களால் சாத்தியமானதாக திமுக உறுப்பினா் ஆஸ்டின் கூறியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் பேசிய ஆஸ்டின், ஊடகங்களாலும், சமூக வலைதளங்களாலும் தவெக ஆட்சிக்கு வந்ததாகவும், அண்ணா-எம்ஜிஆா் போன்றவா்களுடன் முதல்வா் ஜோசப் விஜய்யை ஒப்பிடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தாா்.

இதைத் தவிர தவெகவின் வெற்றி குறித்து வேறு சில வாா்த்தைகளையும் அவா் பயன்படுத்தினாா்.

Advertisement

Advertisement

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த ஆளுங்கட்சியினா், வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் நீக்கினாா்.

அதன் பின்னா் பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், ஊடகங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு திமுகவினா் என்னவெல்லாம் செய்தனா் என்பதை நாடறியும் என்றாா்.

இதற்கு திமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசுகையில், ‘அவையின் மரபு குறித்தும், கண்ணியம் குறித்தும் பேசும் திமுகவினா், அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்; மக்களின் தீா்ப்பையும், தோ்தல் வெற்றியையும் கொச்சைப்படுத்தக் கூடாது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments