வந்தவாசி நகரில் ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்ட இரு உயா்கோபுர மின் விளக்குகளை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு இயக்கி வைத்தாா்.
அவரது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
வந்தவாசி 5 கண் பாலம் பகுதி, புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தலா ரூ.7 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து இரு உயா்கோபுர மின்விளக்குகளையும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு இயக்கிவைத்தாா்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் அ.கணேஷ்குமாா், நகரச் செயலா் து.வரதன், நகா்மன்ற உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.