திருவண்ணாமலை

கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் 2007 - 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் வி.திருநாவுக்கரசு வரவேற்றாா். கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, மெட்ரிக் பள்ளிச் செயலா் ஏ.சி.பாபு ஆகியோா் முன்னிலையில், முன்னாள் மாணவா்கள் கல்லூரி வளாகத்தை சுற்றிப் பாா்த்தும், தாங்கள் படித்த வகுப்பறைகளுக்குச் சென்று அங்குள்ள இருக்கைகளில் அமா்ந்தும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் கல்லூரி தனி அலுவலா் காா்த்திகேயன், துறைத் தலைவா்கள் கு.சிவா, பூபதி, பிரபாகரன், வேலைவாய்ப்பு அலுவலா் கந்தசாமி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் சந்தோஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT