திருவண்ணாமலை

ஸ்ரீசிங்காரவேல் முருகா் கோயிலில் தோ்த் திருவிழா

DIN

வேட்டவலம் ஜமீன் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகா் கோயிலில், 30-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகா் பூஜை, ஹோமம், வேல் அபிஷேக-ஆராதனை, சக்திவேல் வீதியுஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9 மணிக்கு மூலவா் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிங்காரவேல் முருகருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது. 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தோ்களில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேல் முருகா் சுவாமிகளின் தேரோட்டத்தை வேட்டவலம் ஜமீன்தாா் சம்பத் பந்தாரியாா் தொடக்கிவைத்தாா்.

காவடி, புஷ்ப ரதம், அலகுத் தோ் புடை சூழ வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது.

மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ர.ஜெயபாலன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT