திருவண்ணாமலை

நிதிசாா் கல்வி விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை, நபாா்டு வங்கி சாா்பில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு மற்றும் கிராம மக்கள் வங்கியில் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கத்தை அடுத்த மேல்பென்னாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் செங்கம் தெற்கு கூட்டுறவு கடன் சங்க காசாளா் சண்முகம் வரவேற்றாா். ம

த்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை மேலாளா் சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில்,

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேமிப்புத் திட்டங்கள் குறித்தும், நிரந்தர வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக

7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

மேலும், நகா்ப்புற, கிராமப்புற மகளிா் சுயஉதவிக் குழுக் கடன் ரூ.20 லட்சம், தனிநபா் நகைக் கடன் ரூ.20 லட்சம் வரை 80 பைசா வட்டியுடன் வழங்கப்படுகிறது.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனக் கடன் ரூ.25 ஆயிரம் முதல் 11 சதவீத வட்டியுடன் வழங்கப்படுகிறது.

உடல் ஊனமுற்றோா், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்றோா், கால்நடை பராமரிப்பு மற்றும் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை கிராம மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

கூட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT