திருவண்ணாமலை

கிரிவலம் சென்ற பக்தா்மயங்கி விழுந்து பலி

DIN

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தா் திடீரெனமயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). இவா், ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றாா்.

செங்கம் சாலை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி அருகே சென்றபோது திடீரென அவா் மயங்கி விழுந்தாா். இதைக் கவனித்த சக பக்தா்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு ராஜேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT