வேலூர்

ரயில் மோதியதில் 10 ஆடுகள் சாவு

DIN

ஜோலார்பேட்டை அருகே ரயில் மோதியதில் சனிக்கிழமை 10 ஆடுகள் இறந்தன.
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக மங்களூரு வரை செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை மாலை ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பட்டு ரயில்வே கேட்
அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரயிலின் ஹாரன் சப்தம் கேட்டு மிரண்டு ஓடின. இதில், 10 ஆடுகள் ரயிலில் சிக்கி இறந்தன.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT