வேலூர்

பளு தூக்கும் போட்டி: அக்கீம் கல்லூரி சாம்பியன்

DIN

மண்டல பளு, வலு தூக்கும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கல்லூரி மாணவர்கள் வென்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான பளு தூக்கும், வலு தூக்கும்  போட்டிகள் மேல்விஷாரம்  சி.அப்துல் அக்கீம் கல்லூரியில்  நடைபெற்றது. 
இதில் வேலூர், கடலூர் மண்டலங்களைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். 
 இதில் அப்துல் அக்கீம் கல்லூரியின் மாணவர்கள்  பளு தூக்கும் போட்டியில் 236 புள்ளிகளும், வலு தூக்கும் போட்டியில் 186  புள்ளிகளும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.  சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கல்லூரித் தாளாளர் அப்ரார் அஹமது,  கல்லூரியின் முதல்வர் எஸ்.ஏ. சாஜித், உடற்கல்வி இயக்குநர் வே.ராஜா ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT