வேலூர்

சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசு

DIN

ஆற்காட்டை அடுத்த வேப்பூர் குளோபல் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனைப் பள்ளியின் தாளாளர் ராம் பிரசாத்  தொடங்கி வைத்தார். சதுரங்கக் கழக மாவட்ட தலைவர்  மணிகண்டசாமி,  செயலாளர் சண்முகம்,  இணைச் செயலாளர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழில் சதுரங்க கழகத் தலைவர் தினகரன் வரவேற்றார்.  போட்டிகள்  8,  10 மற்றும் 13, 16 வயதுக்கு உள்பட்டோர் என நான்கு பிரிவுகளில்  நடைபெ"ற்றது. இதில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும்,  போட்டியில் பங்கேற்ற 165 பேருக்கு  சான்றிதழ்களை  எழில் சதுரங்க கழகச் செயலாளர் சங்கீதபிரியா   வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT