வேலூர்

திருவள்ளூரில் ஆதிமனிதன் வாழ்ந்ததன் அடையாளம்: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

DIN


திருவள்ளூர் மாவட்டம், அகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமாக கல் ஆயுதங்கள் கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
மாமல்லபுரம் அருகே உள்ள மணமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப் பெரும்புதூரில் உறைகிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதே திருவள்ளூர் மாவட்டம், அகரம்பாக்கத்தில் ராபர்ட் புரூஸ் என்பவரால் கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகும்.
இதன் மூலம் ஆதிமனிதன் வாழ்ந்த இடம் தமிழகம் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, அகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 4 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றை பொற்கை, ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட இடங்களில் அமைக்க முயற்சியெடுத்து வருகிறோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இப்பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT