பெல் நிறுவன குடியிருப்பில் தொடர் திருட்டு
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் 4 வீடுகளின் பூட்டுகளை உடைத்து வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் 4 வீடுகளின் பூட்டுகளை உடைத்து வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் காவியா, மோகன், கிறிஸ்டோபர் மற்றும் பாபு. இவர்கள் 4 பேரும் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில், காவியா சனிக்கிழமை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த கால் கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், மோகன், கிறிஸ்டோபர், பாபு ஆகியோரின் வீடுகளிலும் பூட்டுகளை உடைத்து திருடப்பட்டதும் தெரியவந்தது. திருடு போன பொருள்களின் விவரம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் 5-ஆவது முறையாக திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதால், பொதுமக்கள்
அச்சமடைந்துள்ளனர்.