வேலூர்

குடிசை வீட்டில் தீ விபத்து

DIN

வேலூர் காகிதப்பட்டறை அருகே குடிசை வீடு தீயில் கருகி நாசமானது.
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் (50) எலெக்ட்ரீஷியன். இவர், வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றார். அவரது தாய் முனியம்மா பெங்களூரு வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், முனியம்மா சனிக்கிழமை மதியம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றாராம். அப்போது, மாடிவீட்டின் மேல் உள்ள குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வர தாமதமானதை அடுத்து பொதுமக்களை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதுமாக எரிந்து நாசமானது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் கூறியிருப்பது குறித்து' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வனத்துறையைக் கண்டித்து நடைப்பயணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

கெங்கவல்லி ஒன்றியத்தில் படிக்காதவா்கள் கணக்கெடுப்பு

SCROLL FOR NEXT