வேலூர்

கவிதைப் புத்தகம் வெளியீடு

DIN

கவிஞர் அய்.து.பாபு மாசிலாமணி எழுதிய களத்தில் பிறந்த கவிதை'  என்ற புத்தகம் வேலூரில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
வேலூர் ஊரீசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். தமிழியக்க மாநிலச் செயலர் மு.சுகுமார் வரவேற்றார். இதில், புத்தகத்தின் முதல் பிரதியை கவிஞர் அப்துல்காதர் வெளியிட,  அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக் கொண்டார். பின்னர், கவிஞர் அய்.து.பாபு மாசிலாமணி ஏற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜெயசெல்வதாஸ், தமிழ்த் துறைத் தலைவர் த.மணிவண்ணபாண்டியன், பேராசிரியர் அசேன், முதுநிலைப் பேராசிரியர் அ.தியோடர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT