வேலூர்

புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த 27 குழந்தைகள்

DIN


புத்தாண்டு தினத்தன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ரா.சாந்திமலர் கூறியது: ஜன.1-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் 27 குழந்தைகள் பிறந்தன. அதில் 10 ஆண் குழந்தைகள், 17 பெண் குழந்தைகள். 18 குழந்தைகள் சுகப் பிரசவத்திலும், 9 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தன எனத் தெரிவித்தார். 
புத்தாண்டில் பிறந்த குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களை கல்லூரி முதல்வர் ரா. சாந்தி மலர் புதன்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மகப்பேறு துறைத் தலைவர் மருத்துவர் வினிதா பத்மினி, மருத்துவர் அருமை கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT