வேலூர்

எம்ஜிஆர் பிறந்த நாள்: அதிமுகவினர் மரியாதை

DIN

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, வியாழக்கிழமை, வேலூர் மாவட்டம் முழுவதும் அதிமுக, அமமுக  சார்பில் எம்ஜிஆர் சிலை, உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதிச் செயலர் குப்புச்சாமி தலைமை வகித்தார். மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று வேலூர் பழைய மாநகராட்சி அலுவலம் முன் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.மூர்த்தி, பகுதிச் செயலர் அன்வர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்தொடர்ச்சியாக, 16-ஆவது வார்டில் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.மூர்த்தி ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்தனர்.
ராணிப்பேட்டையில்...
 வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோளிங்கர் பேரூராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் அமைச்சர் அ.முகமதுஜான், சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலர் ச.கார்த்திகேயன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.எல்.விஜயன், நகரச் செயலர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி, கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதில், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் அ.கலைக்குமார், மாவட்ட தகவல்  தொழில்நுட்பச்  செயலர்  க.முல்லைவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில்....
 குடியாத்தம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே, அண்ணா போக்குவரத்துத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மண்டலத் தலைவர் டி. அக்பர்ஷெரீப் தலைமை வகித்தார். நகர அதிமுக செயலர் ஜே.கே.என்.பழனி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மண்டலப் பொருளாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் அரி சத்தியமூர்த்தி, சி.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அதிமுக சார்பில்...
குடியாத்தம் ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலர் வி.ராமு தலைமை வகித்தார். எம்எல்ஏ ஜி.லோகநாதன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து தட்டாங்குட்டையில் ஒன்றியப் பொருளாளர் கே. பெருமாள் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 
அரக்கோணத்தில்...
 அரக்கோணம் நகர அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் நகரச் செயலர் கே.பாண்டுரங்கன் தலைமையில், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். இதில், மாநில மருத்துவர் அணித் துணைச் செயலர் பன்னீர்செல்வம், மாவட்ட பாசறை துணைத் தலைவர் ஷியாம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரக்கோணம் ஒன்றிய அமமுக சார்பில் தணிகைபோளூரில் மாவட்ட நிர்வாகி ஜி.எம்.மூர்த்தி தலைமையில் ஒன்றியச் செயலர் துளசிராமன் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், நிர்வாரிகள் காமராஜ், ரவி, மனோகரன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையம், மாவட்ட அதிமுக அலுவலகம், காதர்பேட்டை, கோணாமேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நகரச் செயலர் ஜி.சதாசிவம் தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 
சென்னாம்பேட்டை பகுதியில் மாவட்டப் பிரதிநிதி க.பிரகாசம் தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. 
வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எல்லம்மாள், முன்னாள் கிளைச் செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 
ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிச் செயலர் பாண்டியன், முன்னாள்  பேரூராட்சித் தலைவர் மஞ்சுளாகந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஆம்பூரில்...
ஆம்பூர் நகரச் செயலர் எம்.மதியழகன் தலைமையில் பஜார் பகுதியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எம்ஜிஆர் உருவப்படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்பூர் நகரக் காவல் நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம். மதியழகன் மாலை அணிவித்தார். மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலர் ஆர்.வெங்கடேசன், அரசு வழக்குரைஞர் ஜி.ஏ.டில்லிபாபு, கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகலாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகர அமமுக சார்பில் நகரச் செயலர் ய.செ.சமரசம் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணி, அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே. பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், மாவட்ட அவைத் தலைவர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். 
வேலூர் மாவட்ட எம்ஜிஆர் கழகம் சார்பில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி. சிவகுமார் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். நகர அவைத் தலைவர் மாணிக்கவேல், நகரத் துணைச் செயலர் காசிநாதன், மாவட்ட இளைஞரணிச் செயலர் எஸ்.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூரில்...
ஜோலார்பேட்டை நகர அதிமுக சார்பில் நகரச் செயலர் எஸ்.பி.சீனிவாசன் தலைமையில், அமைச்சர் கே.சி.வீரமணி கோடியூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில் நகரச் செயலர் டி.டி.குமார் தலைமையில் கட்சியினர் திருப்பத்தூர் பிரதான சாலையில் பேரணியாகச் சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் தம்பாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
ஆற்காட்டில்...
 ஆற்காடு நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு நகரச் செயலர் எம்.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர்சிலைக்கு ஒன்றியச் செயலர் தாஜ்புரா எம்.குட்டி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலர் ஏ.வி.சாரதி தலைமையில் புதிய வேலூர் சாலையில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT