திருப்பத்தூர் ஏரியில் கழிவுகள் அகற்றம்
திருப்பத்தூர் ஏரிப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, நகராட்சியினர் புதன்கிழமை அகற்றினர்.
திருப்பத்தூர் ஏரிப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, நகராட்சியினர் புதன்கிழமை அகற்றினர்.
திருப்பத்தூர் ஏரி மாசடைந்து வருவது குறித்தும், ஏரியில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள் குறித்தும் தினமணி நாளிதழில் புதன்கிழமை விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக திருப்பத்தூர் நகர்மன்ற ஆணையர் இரா.சந்திரா உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஏரியின் முகப்பில் கொட்டப்பட்டிருந்த குப்பை மற்றும் கழிவுகளை அகற்றினர்.