தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலை வழியாக சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு, சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் பத்மநாபன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், பாண்டியன் தொழில்நுட்பக் கல்லூரி, ரெக்ஸ் கேட்டரிங் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேலும், பேருந்துப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர்.