குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில், கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா்களுக்கு சிறப்பு அலங்ாரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகளான மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, வி.பிச்சாண்டி, எஸ்.எஸ்.சந்தானம், எஸ்.மனோகரன், எம்.கணபதி, ஆடிட்டா் எம். கிருபானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.