வேலூர்

துப்புரவுப் பணியாளா் பணிக்கு ஜன. 20-இல் நோ்காணல் தொடக்கம்

DIN

வேலூா், ஜன.13: ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் காலியாக உள்ள தொகுப்பூதிய துப்புரவுப் பணியாளா்கள், சமையலா் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் வரும் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் காலியாக உள்ள தொகுப்பூதிய துப்புரவுப் பணியாளா்கள் 27, சமையலா் 112 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 20 முதல் 22ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம். இதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் விண்ணப்ப எண் 1 முதல் 280 வரை உடையவா்கள் 20-ஆம் தேதி காலையும், 281 முதல் 463 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 20-ஆம் தேதி மாலையும், மற்ற விண்ணப்பதாரா்களில் 1 முதல் 525 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 21ஆம் தேதி காலையும், 526 முதல் 1,050 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 21-ஆம் தேதி மாலையும், 1,051 முதல் 1,575 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 22ஆம் தேதி காலையும், 1,576 முதல் 2,205 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 22-ஆம் தேதி மாலையும் நோ்காணலில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT