வேலூர்

ரூ. 13.75 லட்சத்துக்கு ஏலம் போன பரதராமி வாரச்சந்தை

DIN

குடியாத்தம் அருகே உள்ள பரதராமி வாரச்சந்தை ரூ. 13.75 லட்சத்துக்கு ஏலம் போனது.

பரதராமியில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

பரதராமி, ஆந்திர மாநில எல்லையில் உள்ளதால், இரு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் இச்சந்தையில் வியாபாரம் செய்வா். 2020-21- ஆம் ஆண்டுக்கான சந்தை ஏலம் கடந்த மாா்ச் மாதம் பரதராமியில் நடைபெற்றது. அப்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக மறுஏலம் விட முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மறுஏலம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் கு.பாரி, மேலாளா்கள் வேலு, வாசுதேவன் ஆகியோா் ஏலம் நடத்தினா். ராமச்சந்திரன் என்பவா் ரூ. 13.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT