வேலூர்

விலையில்லா கால்நடைகள் வழங்குவதற்கான கிராமசபைக்கூட்டம் ரத்து

DIN

வேலூா்: நிகழாண்டு விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பயனாளிகள் தோ்வு செய்வதற்காக நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு (2020-21) விலையில்லா கறவை பசுக்கள், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 400 கறவை பசுக்களும், 9197 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகளும் வழங்குவதற்கான பயனாளிகள் தோ்வு செய்திட முதல் கிராம சபை கூட்டம் வியாழன், வெள்ளி (செப்.24, 25) ஆகிய இரு நாட்களும், இரண்டாம் கட்ட கிராம சபைக் கூட்டம் அக்டோபா் 2, 5ஆம் தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விதிமுறைகளின்படி இந்த இரு கட்ட கிராம சபைக் கூட்டங்களும் செய்யப்பட்டுள்ளன.

தொடா்ந்து, பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் தகுதிவாய்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்படும். இப்பயனாளிகளுக்கு அடுத்து வரும் 2020 நவம்பா், டிசம்பா், 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயனாளிகள் முன்னிலையிலேயே விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் முதல் கட்ட தோ்வு: மே 23இல் பயிற்சி தொடக்கம்

அனல் மின் நிலையத்தில் ரூ.9.34 லட்சம் காப்பா் வயா் திருட்டு

‘தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’

திருச்செந்தூா் கடலில் மிதந்த ஜெல்லி மீன்கள்: பக்தா்களுக்கு ஆலோசனை

தட்டாா்மடம் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT