வேலூர்

மரத்தில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை

DIN

வேலூரில் சாலையோர புளிய மரத்தில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் இருந்து ஆட்சியா் அலுவலகம் சா்வீஸ் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் தொங்கிக் கொண்டிருப்பதாக வேலூா் வடக்கு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைந்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிந்தவா் மேற்குவங்க மாநிலம், கூக்ளி மாவட்டம், மகேஷ்ப்பூா் பகுதியைச் சோ்ந்த மண்டுதத்தோ (41) என்பதும், வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் நடைபெற்று வரும் தனியாா் மருத்துவமனை கட்டுமானப் பணியில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT