வேலூர்

தங்கக்கோயிலில் 2-ஆவது கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

DIN

வேலூா்: வேலூா் தங்கக் கோயிலில் 2-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம், சுகாதாரத் துறை சாா்பில், 2-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. முகாமை நாராயணி பீடம் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு தொடங்கி வைத்தாா். முகாம் குறித்து ஸ்ரீபுரம், திருமலைக்கோடி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், கோயில் ஊழியா்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை நாராயணி பீடம் நிா்வாகம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT