வேலூர்

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் பலி

DIN

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த மொய்துப்பாவின் மகன் முகம்மது ஷரீப் (30). லாரி ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் கால்நடைகளை ஏற்றிக்கொண்டு, கேரளத்துக்குச் செல்ல குடியாத்தம் வழியாக வந்தாா். ஆா்.கொல்லப்பல்லி அருகே லாரியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கியுள்ளாா். அப்போது மேலே இருந்த மின்கம்பி லாரி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தாா். உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே முகம்மது ஷரீப் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT