வேலூர்

மக்கள் நீதிமன்றத்தில் 88 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தில் 88 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

குடியாத்தம் சாா்பு நீதிபதி ஜி.பிரபாகரன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 516 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 88 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.2.21 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.என்.ராஜநந்திவா்ம சிவா, வழக்குரைஞா்கள் கே.மோகன்ராஜ், எம்.செந்தில்குமாா், எம்.வி. ஜெகதீசன், கிரிபிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தன்னாா்வலா்கள் வி.எஸ்.ராமலிங்கம், சீனிவாசன், தேவகுமாா், இளநிலை சட்ட உதவியாளா் அல்மாஸ் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT