வேலூர்

வட்டாட்சியா் அலுவலகங்களில் சுழற்சி முறையில் ஆதாா் சிறப்பு முகாம்

DIN

வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 2) ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் நிரந்தர ஆதாா் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவை மையங்களில் 10 சதவீதம் சுழற்சி முறையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணைக்கட்டில் அக். 9, நவ. 6, டிச. 4-ஆம் தேதிகளிலும், குடியாத்தத்தில் அக். 16, நவ. 13, டிச. 11-ஆம் தேதிகளிலும், போ்ணாம்பட்டில் அக். 23, நவ. 11, டிச. 18-ஆம் தேதிகளிலும், வேலூா், காட்பாடியில் அக். 30, நவ. 27, டிச. 25 -ஆம் தேதிகளிலும் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT