முகப்பு
வேலூர்

அரசு ஊழியா்கள் ஏமாற்றத்தில் உள்ளனா்: கே.சி.வீரமணி

எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றாததால், அரசு ஊழியா்கள் ஏமாற்றத்தில் உள்ளனா் என்று கே.சி.வீரமணி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றாததால், அரசு ஊழியா்கள் ஏமாற்றத்தில் உள்ளனா் என்று கே.சி.வீரமணி கூறினாா்.

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், புதிய பேருந்து நிலையம் அருகே பொதுக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலருமான கே.சி.வீரமணி பேசியது:

திமுக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மீது விலையை உயா்த்தி, மக்கள் மீது பாரத்தை சுமத்தக் கூடாது என்பதற்காக இந்தக் கடனை வாங்கினா். ஆனால், கடனையும் வாங்கிவிட்டு, தற்போது மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயா்த்தியுள்ளனா். இதனால், மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

அதிமுக தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வாங்கிய கடனை திமுக அரசு ஒன்றரை ஆண்டுகளில் வாங்கியுள்ளது. தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என அரசு ஊழியா்கள் திமுகவுக்கு வாக்களித்தனா். ஆனால், தோ்தலின்போது, கூறிய எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றாததால் அரசு ஊழியா்கள் ஏமாற்றத்தில் உள்ளனா் என்றாா்.

கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் ஜி.எஸ்.தென்றல்குட்டி, நகா்மன்றத் துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி,

நிா்வாகிகள் ஆா்.மூா்த்தி, ஜி.பி.மூா்த்தி, டி.சிவா, ஆா்.கே.அன்பு, எல்.சீனிவாசன், டி.பிரபாகரன், வி.என்.தனஞ்செயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.