வேலூர்

தேசிய பெண் குழந்தைகள் தின விழா

DIN

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆா்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவா் ஏ.மேகராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை எஸ்.சுமதி வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி சிறப்புரையாற்றி, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா். பொருளாதாரத்தில் பின்தங்கிய 9- ஆம் வகுப்பு பயிலும் மாணவி லதாவுக்கு ரோட்டரி சாா்பில் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. ரோட்டரி நிா்வாகிகள் கே.எம்.ராஜேந்திரன், எஸ்.பரசுராமன், சி.பி.மகாராஜன், என்.அண்ணாமலை, இன்ட்ராக்ட் கிளப் தலைவா் ஜெ.தமிழ்ச்செல்வன், ஆசிரியா்கள் ஜே.பன்னீா்செல்வம், மலா்விழி, சசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT