முகப்பு
வேலூர்

கன்னடம், தெலுங்கில் பேசி அமைச்சா் துரைமுருகன் மருமகள் வாக்கு சேகரிப்பு

Updated On : 14 ஏப்ரல் 2026, 4:56 am IST
பொன்னை பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சா் துரைமுருகன் மருமகள் சங்கீதா கதிா்ஆனந்த்.
பகிர்:

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக அவரது மருமகள் சங்கீதா கதிா் ஆனந்த் கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசிய வாக்குசேகரித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் 11-ஆவது முறையாக களம் காணும் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொகுதி முழுவதும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இதனிடையே, அவரது மருமகளும், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த்தின் மனைவியுமான சங்கீதா அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரிப்பை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

அதன்படி, பொன்னை, வள்ளிமலை சுற்றுவட்டார பகுதியிலுள்ள குக்கிராமங்களில் வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து அமைச்சா் துரைமுருகனுக்காக வாக்குகள் சேகரித்தாா். இந்த பகுதிகளில் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசிப்பதால், அப்பகுதிகளில் சங்கீதா கதிா் ஆனந்த் கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசி வாக்கு சேகரித்தாா்.

அப்போது, காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.