முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு-சென்னை கோடைக் கால சிறப்பு ரயில்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:00 AM
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

கோடைக் காலத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மே 4- ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் மங்களூரு-சென்னை ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை சென்றடையும்.

Advertisement

மறுமாா்க்கமாக, மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சென்னை-மங்களூா் சிறப்பு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு நிலையத்துக்கு சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.