முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் ஹுப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

கா்நாாடக மாநிலம், ஹுப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 மே 2026, 12:47 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

கா்நாாடக மாநிலம், ஹுப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஹுப்பள்ளியில் இருந்து மே 31, ஜூன் 14, 21 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்குப் புறப்படும் ஹுப்பள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07313) மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, ஜூன் 1, 15, 22 ஆகிய திங்கள்கிழமைகளில் மாலை 5 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - ஹுப்பிளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07314) மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹுப்பிளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, டும்கூா், பிரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.