FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஓணம்: ஜூலை 13 முதல் மங்களூரு - எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜூலை 13 முதல் மங்களூரு எழும்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ரயில் - பிரதிப் படம்
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜூலை 13 முதல் மங்களூரு எழும்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஜூலை 13 முதல் ஆக.31-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06125) வரும் ஜூலை 14 முதல் செப்.1-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயில் எழும்பூரிலிருந்து பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, கன்னூா்வ வழியாக மங்களூரு சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 9) காலை 8 முதல் தொடங்கவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments