கோயம்புத்தூர்

பெண் தீக்குளிப்பு: காப்பாற்ற முயன்ற கணவர் சாவு

DIN

கோவையை அடுத்துள்ள மதுக்கரை அருகே திருமணமாகி 6 மாதங்களேஆன  இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் உயிரிழந்தார். 
நாகை மாவட்டம்,  சீர்காழியைச் சேர்ந்தவர் தினேஷ் (26). இவரது மனைவி சரண்யா (22). இவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், கோவையை அடுத்துள்ள க.க.சாவடியில் இருவரும் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  (டிசம்பர் 3) இரவு தினேஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். 
இதைக் கண்டித்த சரண்யாவுக்கும், தினேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சரண்யா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை தினேஷ் காப்பாற்ற முயன்றார். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் கோவை அரசு மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அங்கு தினேஷ் புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT