கோயம்புத்தூர்

வீட்டில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் திருட்டு

DIN

போத்தனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 25 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வெள்ளலூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், வழக்கம்போல வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றபோது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் மற்றும் 2 ஏடிஎம் அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT