கோயம்புத்தூர்

பஞ்சு குடோனில் தீ விபத்து

DIN

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மில் பஞ்சு குடோனில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
  நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெரிய பாலத்துக்கு அருகே தனியார் மில் உள்ளது. இங்கு நூல் கோன்கள்
உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக குடோனில் பஞ்சு மூட்டைகள் வைத்துள்ளனர்.
 இந்நிலையில் பஞ்சு குடோனில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து நேரிட்டது. பஞ்சு மூட்டைகளில் தீ பரவி  கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT