கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே ரயிலில் பாய்ந்து இருவர் தற்கொலை முயற்சி: ஒருவர் சாவு

DIN

பொள்ளாச்சி அருகே ரயிலில் பாய்ந்து இருவர் தற்கொலைக்கு முயன்றனர். இதில், ஆண் உயிரிழந்தார்; இலங்கையைச் சேர்ந்த பெண் உயிர் தப்பினார்.
இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸார் கூறியதாவது:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஊத்துக்காடு சாலையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (55). இவரும்  இலங்கையைச் சேர்ந்த மனோரஞ்சிதம் (45) என்ற பெண்ணும் முகநூலில் பழகி வந்துள்ளனர். 
இந்த நிலையில், இருவரும் பொள்ளாச்சியை அடுத்த ஊத்துக்காடு அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றனர். 
இதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனோரஞ்சிதம் காயங்களுடன் உயிர் தப்பினார். 
இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT