சூலூர் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.
சூலூரை அடுத்த செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தனபால் மனைவி புஷ்பவதி(49). இவர் திங்கள்கிழமை மதியம் காங்கேயம் பாளையம் பகுதியில் சாலையில் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே திருப்பூர் நோக்கி விமானப்படை ஊழியர் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், புஷ்பவதி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு புஷ்பவதி திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.