கோயம்புத்தூர்

அன்னூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றம்

DIN

அன்னூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை 25 இடங்களில் கொடியேற்றப்பட்டன.
அன்னூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் என்.ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். 
மாவட்ட நிர்வாகக் குழு  உறுப்பினர் தங்கவேலு, மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஆர்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் வஹாப் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலப் பொருளாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகம் கலந்து கொண்டு 25 இடங்களில் கொடியேற்றி வைத்து பேசியதாவது, அன்னூர் ஒன்றியத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. 
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நீதிமன்றம் அமைக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆகஸ்ட் 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT