கோயம்புத்தூர்

இளம்பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞர் கைது

DIN

சூலூர் அருகே ஒருதலைக் காதலால் இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த இளைஞரை சூலூர் போலீஸார் கைதுசெய்தனர்.
சூலூரை அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளநிலை படிப்பு படித்து வருகிறார். சூலூரை அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் (20). ஆன்லைன் உணவு நிறுவனத்தில் உணவு விநியோகிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது இருவரும் நட்பாகப் பழகி வந்தனராம். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு சதீஷ்குமார், இளம்பெண்ணிடம்  தனது காதலை தெரிவித்துள்ளார். இதனை அப்பெண் ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு சதீஷ்குமார் வற்புறுத்தியதாக தெரிகிறது. 
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கொலைசெய்து விடுவதாக மிரட்டினாராம்.  இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், சூலூர் போலீஸார் சதீஷ்குமாரை கைது செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT