வால்பாறையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
வால்பாறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை அண்ணா நகரிய திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு நகரச் செயலாளர் மயில்கணேசன் தலைமை வகித்தார். அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது முன்னிலை வகித்தார். பேரவைச் செயலாளர் நரசப்பன் வரவேற்று பேசினார்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு ஆகியோர் அதிமுக ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் வால்பாறை தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை அசோக்குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் விஜயகுமார், நகர இணைச் செயலாளர் பொன்கணேஷ், சலாவுதீன், பூசப், முருகன் உள்பட கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.