இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.25 லட்சம் திருட்டு
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (52). இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.2.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்றுள்ளார்.
அப்போது பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 லட்சம் காணாமல்போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக முருகன் அளித்தப் புகாரின் பேரில் பஜார் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.