அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 ஊராட்சிகளில் டெங்கு தடுப்புப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
குப்பைகள் அகற்றுதல், புகை மருந்து அடித்தல், பயன்படுத்தாத தேங்காய் தொட்டிகள், பழைய டயா்கள் உள்ளிட்ட பொருள்களை அகற்றுதல், அபேட் கரைசல் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை டெங்கு தடுப்பு பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மேற்கொண்டனா்.
இப்பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குழந்தைராஜ், விஜயராணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.