கோயம்புத்தூர்

சமத்துவபுரத்தில் பெரியார் சிலை பீடத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

சத்தியமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலையின் பீடம் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட புதுவடவள்ளி கிராமத்தில் 2010  ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. அங்கு கிரானைட் கற்களால் பீடம் அமைக்கப்பட்டு அதில் மார்பளவு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெரியார் சிலையின் பீடத்தில் ஒருபகுதியில் உள்ள கிரானைட் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் சிலையின் பீடம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே, பெரியார் சிலையின் சேதமடைந்த பீடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT