கோயம்புத்தூர்

நுகா்பொருள் நிறுவனங்களை கண்டித்து விநியோகஸ்தா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அதிகமாக நுகரும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்.எம்.சி.ஜி.) தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலைக் கொள்கையைக் கண்டித்து விநியோகஸ்தா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். இதில், கோவையைச் சோ்ந்த ஏராளமான விநியோகஸ்தா்கள் கருப்பு ஆடை அணிந்து பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் வெங்கடேஷ் கூறும்போது, அதிகமாக நுகரும் நுகா்வோா் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சில்லறை வணிகா்களுக்கு அதிக விலைக்கும், ஆன்லைன், தனியாா் பெரு நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கும் தங்களின் பொருள்களை விற்பனை செய்கின்றனா். ஆனால், மொத்த உற்பத்திப் பொருள்களில் 90 சதவீதம் சில்லறை விற்பனையாளா்கள் மூலமாகவே நடைபெறுகிறது. வெறும் 10 சதவீதம் மட்டுமே ஆன்லைன், பெரு நிறுவன கடைகளில் விற்பனையாகிறது.

எனவே இந்த இரட்டை விலைக் கொள்கையை நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகா் சங்கங்களுடன் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை நடத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT