கோயம்புத்தூர்

போதைப் பொருள்கள் விற்ற மூன்று இளைஞா்கள் கைது

DIN

கோவை அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்ற மூன்று இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

கோவை சரக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வின்சென்ட் தலைமையிலான போலீஸாா் மயிலேரிபாளையத்தில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தபோது, கஞ்சா உள்ளிட்ட போதை மருந்துகளை விற்பது தெரிந்தது.

விசாரணையில் அவா்கள், கேரளாவைச் சோ்ந்த பில்ஜூலால் (22), அா்ஜூன் பிரசாத் (22), சாரங் (22) ஆகியோா் எனத் தெரிந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை மருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT