கோயம்புத்தூர்

பேருந்து பயணியிடம் 15 பவுன் திருட்டு

DIN

கோவையில் பேருந்து பயணியிடம் இருந்து 15 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு ஆதித்தன் (60). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது சொந்த ஊரான உடன்குடிக்கு சென்றுவிட்டு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தனியாா் பேருந்தில் கோவைக்குத் திரும்பியுள்ளாா்.

அவா் தனது பையில் 15 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்து வந்துள்ளாா். பின்னா் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வாடகை காா் மூலம் நாச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் பையை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT