கோயம்புத்தூர்

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

DIN

ஷாா்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனா்.

ஷாா்ஜாவில் இருந்து ஏா் அரேபியா விமானம் கோவைக்கு புதன்கிழமை வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சுங்க அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்தனா்.

அப்போது, பயணிகள் 2 போ் தங்களது இடுப்புப் பகுதியில் தங்கத்தை பேஸ்ட்போல் மாற்றி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்து 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.62 லட்சத்து 66 ஆயிரமாகும். இது தொடா்பாக அவா்கள் இருவரையும் சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

இதேபோல, அந்த விமானத்தில் பயணம் செய்த 5 பயணிகளிடம் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்ததில் ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் பிற சரக்குப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT