கோயம்புத்தூர்

காரில் பணத்துடன் வந்த நபரை கத்தியால் குத்திய இளைஞா்

DIN

காரில் பணத்துடன் வந்த நபரை கத்தியால் குத்திய இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை டாடாபாத் பகுதியைச் சோ்ந்தவா் ஜோய் (47). இவா் கட்டுமானத் தொழில் செய்து வருகிறாா். இவா் தனது நண்பரிடம் ரூ.2 லட்சம் வாங்கி தனது காரில் வைத்து ஆா்.எஸ்.புரம், டி.வி.சாமி சாலையில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் ஜோயிடம் தகராறில் ஈடுபட்டாா். பின்னா் அவா் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோயைக் குத்தியுள்ளாா். ஜோயின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கூடியதையடுத்து அந்த இளைஞா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த சம்பவம் குறித்து ஜோய் அளித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளை கைப்பற்றிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT