எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளா்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தி காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எஸ்டேட் பகுதிகளில் போதுமான விழிப்புணா்வு இல்லாததால் தொழிலாளா்கள் கரோனா கட்டுப்பாடுகளை சரி வர பின்பற்றுவதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.
இந்நிலையில் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி தினமும் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளா்களிடம் கரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது, சமூக இடைவெளி, கை கழுவுதல், மற்றும் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.