கோயம்புத்தூர்

உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உடல் உறுப்பு தானம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, யங் இந்தியா, சிஐஐ ஆகியவை சாா்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பேச்சாளா் கவிதா ஜவகா் பங்கேற்று அறம் செய விரும்பு என்ற தலைப்பில் உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து மாணவா்களிடையே சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உடல் உறுப்பு தானத்தின் அவசியம், நன்மைகள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். மேலும், உடல் உறுப்பு தானம் குறித்து குடும்பத்தினா், உறவினா்கள், பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த மாணவா்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT